தில்லியின் கிராரி பகுதியில் அமைந்துள்ள துணிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமார் 12:30 மணியளவில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இச்சம்பத்தின் காரணமாக 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த தீ விபத்து காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை திங்கள்கிழமை 9-ஆக அதிகரித்துள்ளது.
சமீபகாலமாக தில்லியில் அடுத்தடுத்து தீ விபத்து சம்பவங்கள் நடைபெற்று வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, அனாஜ் மண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.