தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தலைநகர் தில்லியில் பனிமூட்டம்: 11 ரயில்கள் தாமதம்

கடும் பனிமூட்டம் காரணமாக தலைநகர் தில்லி வரும் 11 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2019, 4:23 am

DIN


கடும் பனிமூட்டம் காரணமாக தலைநகர் தில்லி வரும் 11 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த மாதம் தொடக்கத்திலிருந்து கடும் குளிர் நிலவி வருகிறது. காலை நேரங்களில் நிலவும் மூடு பனியால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை நிலவிய பனி மூட்டம் காரணமாக 11 ரயில்களின் வருகை தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோசமான பனி மூட்டம் காரணமாக தில்லி வரும் விரைவு ரயில்கள் அனைத்தும் தாமதமாகவே வருகின்றனர். இதனால் பயணிகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். 

மோசமான காற்றின் தரம் மற்றும் கடும் குளிர் காரணமாக, வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். 

தில்லி மட்டுமன்றி, பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் கடும் பனி நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.