டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 12 பேர் உயிரிழந்தனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் மறைமுகமாக கள்ளச்சாராயம் விறபனை செய்யப்பட்டு வருகிறது அங்கு கள்ளச்சாராயம் வாங்கி குடித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
சட்டவிரோத மது உற்பத்தியின் பின்னால் உள்ளவர்கள் யார்? என்று இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.