ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தில்லி முதல்வர் கேஜரிவால் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: பாஜக காரணமா? 

தில்லி முதல்வர் கேஜரிவால் கார் மீது  வெள்ளியன்று மர்ம நபர்கள் நிகழ்த்திய தாக்குதலுக்கு,  பாஜகவினர்தான் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி புகார் கூறியுள்ளது.

News image
Updated On :8 பிப்ரவரி 2019, 1:12 pm

DIN

தில்லி: தில்லி முதல்வர் கேஜரிவால் கார் மீது  வெள்ளியன்று மர்ம நபர்கள் நிகழ்த்திய தாக்குதலுக்கு,  பாஜகவினர்தான் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி புகார் கூறியுள்ளது.

தில்லி முதல்வரான அவிந்த் கேஜரிவால் வெள்ளியன்று நரில்லா பகுதியில்  வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழாவுக்கு  சென்று கொண்டிருந்தார். அவரது கார் செல்லும் வழியில் 100-க்கும் மேற்பட்டோர் கைகளில் தடிகளுடன் குழுமியிருந்தனர். அவர்கள் முதல்வரை சந்திக்க விரும்பி அதற்கு முயன்றனர்.

ஆனால் அவரது கார் அப்பகுதியில் நிற்காமல் சென்றதால் அதிருப்தியடைந்த அவர்கள் தாங்கள் கையிலிருந்த தடிகளால்,முதல்வர் காரை தாக்கினர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கார் மீதான தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் முதல்வர் அலுவலக தரப்பு தெரிவிக்கிறது.

அதேசமயம் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசில்புகார் அளித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, இதன் பின்னணியில் பாஜக தொண்டர்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.