பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் பேரத்தில் ஈடுபட்டதா?: ராகுல் குற்றச்சாட்டுக்கு  நிர்மலா சீதாராமன் மறுப்பு 

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் பிரான்ஸ் அரசுடன் பேரத்தில் ஈடுபட்டது என்ற ராகுல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துளார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2019, 11:15 am

DIN

புதுதில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் பிரான்ஸ் அரசுடன் பேரத்தில் ஈடுபட்டது என்ற ராகுல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக பிரான்ஸ் அரசுடன் பேரத்தில் ஈடுப்பட்டது என்றும், இந்த தலையீட்டின் காரணமாக அதிருப்தியடைந்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள், தங்கள் கருத்துக்களை அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு அனுப்பிய கோப்பு ஒன்றில் குறிப்புகளாக எழுதியுள்ளதாக கூறி, அதற்கான ஆதாரங்களை பிரபல ஆங்கில நாளேடு ஒன்று வெள்ளியன்று வெளியிட்டிருந்தது.

இதை முன்வைத்து பிரதமர் அலுவலகம் மற்றும்பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளியன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் பிரான்ஸ் அரசுடன் பேரத்தில் ஈடுபட்டது என்ற ராகுல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு அப்போதைய பாதுகாப்புத் துறை செயலர் எழுதியுள்ளதாக ஒரு கோப்புக் குறிப்பினை செய்தித்தாளொன்று வெளியிட்டுள்ளது. அப்படியென்றால் அதற்கு அவர் என்ன பதில் அளித்தார் என்பதையும் வெளியிடுவதே பத்திரிக்கை தர்மமாகும்.

அந்த குறிப்பிற்கு, "அமைதியாக இருக்கவும். கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது"  என்று மனோகர் பாரிக்கர் பதிலளித்துள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்த சோனியா,அப்போது பிரதமர் அலுவலக செயல்பாட்டில் தலையிட்டதை என்னவென்று கூறுவீர்கள்?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.