ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு ஆதரவாக சீனா முடிவு 

புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு ஆதரவாக சீனா எடுத்துள்ள முடிவு இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2019, 11:12 am

புது தில்லி: புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு ஆதரவாக சீனா எடுத்துள்ள முடிவு இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஒருவர்  மோதி வெடிக்க செய்ததில் 43 வீரர்கள் பலியாகினர்.

வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புக்கு தலைவராக மசூத் அசார் என்பவர் செயல்பட்டு வருகிறார்.

மசூத் அசாரை ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து, அவரது அமைப்பை முடக்கும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. 

இதுதொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதி என அறிவிக்க இந்தியா கொண்டுவந்த வந்த தீர்மானத்தை, பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படும் நோக்கில், சீனா தனது 'வீட்டோ' அதிகாரத்தால் ரத்து செய்தது. அதன்பின் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இதே தீர்மானத்தைக் கொண்டுவந்த போதிலும் நிறைவேற்ற முடியவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று சீனா மீண்டும் தெரிவித்துள்ளது.

முன்னதாக புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குக் சீனா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.