பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் நாடு திரும்ப மத்திய அரசு உத்தரவு 

பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் நாடு திரும்புமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் நாடு திரும்ப மத்திய அரசு உத்தரவு 
Published on
Updated on
1 min read

புது தில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் நாடு திரும்புமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி மோதி வெடிக்க செய்ததில் 43 வீரர்கள் பலியாகினர். 

வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் நாடு திரும்புமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

புல்வாமா தாக்குதலைக்கு எதிர்வினையாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கருதப்படுகிறது.

முன்னதாக புதுதில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com