பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புல்வாமா தாக்குதல் எதிரொலி : காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு ரத்து 

புல்வாமா கோர தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக  காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :17 பிப்ரவரி 2019, 7:03 am

DIN

ஜம்மு: புல்வாமா கோர தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக  காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வியாழன் அன்று நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டில் நிலவி வரும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து, உளவுத்துறை மற்றும் காவல்துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை காலை ஆலோசனை நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகையில் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் உள்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் புல்வாமா கோர தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக  காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்து மத்திய அரசு ஞாயிறன்று உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.