புது தில்லி: நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம்தான் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு தகுதியானவர்ளை நியமிக்கும் பணியினை விரைவு படுத்துமாறு மத்திய அரசுக்கு வழிகாட்டக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யபட்டது.
இந்த மனுவானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி சஞ்சய் கண்ணா முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது.அப்போது ரஞ்சன் கோகோய் கூறியதாவது:
ஒரு தலைமை நீதிபதியாக நான் சொல்கிறேன். அரசு வசம் 27 கோப்புகள் மட்டுமே உள்ளன.ஆனால் கொலீஜியத்திடம் 70 முதல் 80 கோப்புகள் தேங்கியுள்ள.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.