டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சபரிமலையில் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசித்த 2 பெண்கள்: பதற்றம்; நடை சாத்தப்பட்டது (வீடியோ)

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலைக்கு இன்று அதிகாலை சென்ற 50 வயதுக்குக் குறைவான இரண்டு பெண்கள் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசித்து வந்துள்ளது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:46 am

DIN


சபரிமலை: கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலைக்கு இன்று அதிகாலை சென்ற 50 வயதுக்குக் குறைவான இரண்டு பெண்கள் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசித்து வந்துள்ளது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் சபரிமலைக்கு செல்ல பம்பை வந்த இரண்டு பெண்களும், காவல்துறை அனுமதியோடு நேற்று இரவு மீண்டும் மலை ஏறத் தொடங்கினர். இன்று அதிகாலை 3.45 மணியளவில் கோயிலுக்குள் நுழைந்து ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு காலை 5 மணிக்குள் மலையில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.

பம்பை வந்த இரண்டு பெண்களும், காவல்துறை பாதுகாப்போடு நாங்கள் ஐயப்பனை தரிசித்து வந்தோம் என்று தெரிவித்த பிறகே இரண்டு பெண்கள் ஐயப்பனை தரிசித்த விவகாரம் வெளியே தெரிய வந்தது.

இதனால் சபரிமலை கோயில் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. சபரிமலை தந்திரி ஆலோசனை நடத்தி, சாந்தி பரிகாரம் செய்ய ஐயப்பன் கோயில் நடை மூடப்பட்டுள்ளது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.