பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சி நாடாளுமன்றத்திற்கு வராத மோடி: ராகுல் விமர்சனம்  

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சி பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்., 

News image
Updated On :4 ஜனவரி 2019, 11:40 am

DIN

புது தில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சி பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்., 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக பாஜக மீது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்றைய மக்களவை கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சி பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:

ரஃபேல் பேரம் தொடர்பான கோப்புகளில் இடம்பெற்றுள்ள விபரங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டும். 

விவகாரத்தில் காங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சி பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரவில்லை

எனது குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் அளிக்க இயலாமல் நிதியமைச்சர் அருண் ஜேட்லி  தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக அவையில் பேசி வருகிறார். 

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால், ரஃபேல் ஊழல் தொடர்பாக கிரிமினல் வழக்கு தொடரப்படும். குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.