ராஜஸ்தான்: கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கும் நிலையில் ராஜஸ்தானில் நடந்திருக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவ வலியோடு வந்த கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம் சொல்லில் வடிக்க முடியாததாக உள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஆண் செவிலியர், குழந்தையை வெளியே எடுக்கும் போது அலட்சியமாக செயல்பட்டதால், குழந்தை இரண்டாக துண்டிக்கப்பட்ட நிலையில், குழந்தையின் தலை மட்டும் கர்ப்பிணியின் கருப்பைக்குள்ளேயே தங்கிவிட்டது.
குழந்தையின் தலையில்லாத உடலை பிணவறையில் வைத்த ஊழியர்கள், உடனடியாக அப்பெண்ணை மேல்சிகிச்சைக்காக ஜெய்சல்மேருக்கு செல்லுமாறு அனுப்பி வைத்துவிட்டனர்.
அங்கு அறுவை சிகிச்சை செய்து கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசுவின் தலை வெளியேற்றப்பட்டது. மருத்துவமனையின் அலட்சியத்தால், குழந்தை மரணம் அடைந்ததோடு, கர்ப்பிணியின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டது.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


