முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தேச விரோத வழக்கு: கன்னையா குமார் மீது காவல் துறை குற்றப்பத்திரிகை

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்டுள்ள தேச விரோத வழக்கில்,

News image
Updated On :15 ஜனவரி 2019, 1:28 am IST


தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்டுள்ள தேச விரோத வழக்கில், தில்லி காவல் துறை திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 
முன்னாள் மாணவர்கள் உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி, நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதாக, தூக்கிலிடப்பட்ட அஃப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் தேச விரோத கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த கன்னையா குமார், அவர்களை தேசத்துக்கு எதிராக கோஷமிடுமாறு தூண்டியதாகக் காவல் துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக, அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பினரும், பாஜக எம்.பி. மகேஷ் கிரியும் வசந்த்குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில், கன்னையா குமார் உள்ளிட்டோர் மீது தேச விரோதச் செயலில் ஈடுபட்டது(124ஏ), குற்றச்சதியில் ஈடுபட்டது(120பி), சட்டவிரோதமாக கூடியது(149), வன்முறையில் ஈடுபட்டது(147) என இந்திய தண்டனையியல் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, விசாரணை நடத்தி வந்த தில்லி காவல் துறை, தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சுமித் ஆனந்த் முன்னிலையில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அந்தக் குற்றப்பத்திரிகையில், கன்னையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜாவின் மகள் அபராஜிதா, மாணவர் சங்க முன்னாள் துணைத் தலைவர் ஷேஹ்லா ரஷீத், அசுதோஷ் குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.