பிரியங்காவுக்கு காங்கிரஸில் பதவி அளிக்கப்பட்டிருப்பது, ஒரேயொரு குடும்பம்தான், காங்கிரஸுக்கு கட்சியாக உள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் பாராமதி, கட்சிரோலி உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் மோடி காணொலி வாயிலாக புதன்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: பல இடங்களில் குடும்பமே கட்சியாக உள்ளது; அவ்வாறில்லாமல், பாஜக ஒரு குடும்பமாக உள்ளது. பாஜகவில் தனிப்பட்ட ஒரு நபர் அல்லது குடும்பத்தினர் விருப்பப்படி முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. கட்சித் தொண்டர்களின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.
பாஜக, ஜனநாயகக் கொள்கைகளால் இயங்கி வருகிறது. கட்சியின் அனைத்து நிலைகளிலும் ஜனநாயகம் தழைத்தோங்குகிறது. ஆகவேதான், தங்களுக்கு நெருக்கமான கட்சியாக பாஜகவை மக்கள் உணர்கிறார்கள் என்றார் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்ஸ்டாவில் பழகி 14 வயது சிறுவனுடன் 40 வயது பெண்மணி திருமணம்! -போலீஸில் புகார்
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


