இம்பால்: நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஞாயிறு காலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி நகரில் ஞாயிறு காலை 10.19 மணியளவில் மிதமான அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.
இதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.