உணவுத் துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாறியதற்குக் காரணமான விவசாயிகளுக்கு நன்றி என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன்,
வேளாண் துறை சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.
உணவுத் துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாறியதற்குக் காரணமான விவசாயிகளுக்கு நன்றி.
விவசாயிகளே இந்த நாட்டுக்கு உணவளிப்பவர்கள். விவசாயத் துறையில் தனியார் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது.
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெறுவோம்.
2024ம் ஆண்டுக்குள் அனைத்துக் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் உறுதி செய்யப்படும் என்று பேசினார்.