தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதே மத்திய அரசின் முக்கிய குறிக்கோள் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் நிகழ்த்திய உரையில், தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதே மிகவும் முக்கியமான மத்திய அரசின் குறிக்கோள்.
அனைத்து இந்தியர்களுக்கும் சுகாதாரமான குடிநீர் வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2024க்குள் அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் குழாய் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் வழங்க ஹர் கர் ஜல் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.