
மதியத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவு: கர்நாடக பேரவை கூடியது
இன்று மதியத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டிருக்கும் நிலையில், கர்நாடக சட்டப்பேரவை இன்று காலை கூடியது.

கர்நாடக சட்டப்பேரவையில் பேசும் முதல்வர் குமாரசாமி.
பெங்களூரு: இன்று மதியத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டிருக்கும் நிலையில், கர்நாடக சட்டப்பேரவை இன்று காலை கூடியது.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் இன்று தொடங்கியது.
முதல் நாளான நேற்று காங்கிரஸ் மற்றும் மஜத உறுப்பினர்களின் அமளியால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று 2வது நாளாக நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில், முதல்வர் குமாரசாமி உரையாற்றி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





