சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாளைதான் கடைசிநாள்: குமாரசாமி அரசுக்கு எடியூரப்பா செக்! 

நாளைதான் குமாரசாமி அரசுக்கு கடைசிநாள் என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 ஜூலை 2019, 1:41 pm

DIN

பெங்களூரு: நாளைதான் குமாரசாமி அரசுக்கு கடைசிநாள் என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, சபாநாயகர், குமாரசாமி ஆகியோர் திங்கள்கிழமை(நாளை) பெரும்பான்மையை அவையில் நிருபிப்போம் எனத் தெரிவித்துள்ளார்கள். ஆனால் நான் 100 சதவீதம் நம்பிக்கையுடன் சொல்கிறேன், நாளை குமாரசாமி அரசு முடிவுக்கு வந்துவிடும். நாளைதான் குமாரசாமி அரசுக்கு கடைசிநாள்.

காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி அமைத்த நாளில் இருந்தே தொடர்ந்து சிக்கல் கட்சிக்குள் இருந்து வருகிறது. எப்படியும் ஆட்சி  கவிழ்ந்து விடும் என்ற நிலையில் தேவையில்லாமல் அவகாசத்தைப் பெற்றுக்கொண்டு காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

மும்பையில் தங்கி இருக்கும் 15 எம்எல்ஏக்களை வாக்களிக்கக் கூறி கட்டாயப்படுத்தக் கூடாது உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது. அது அவர்களுடைய விருப்பம் எனக் கூறி இருக்கிறது.

மேலும், அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் எந்தவிதமான கொள்கை முடிவுகளும், பெரிய முடிவுகளும் எடுக்கக் கூடாது என்று முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.