தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் நிலையான ஆட்சியை பாஜகவால் வழங்க முடியாது: காபந்து முதல்வர் குமாரசாமி

கர்நாடகத்தில் நிலையான ஆட்சியை பாஜக வழங்குவது கடினம் என காபந்து முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

Published On :

கர்நாடகத்தில் நிலையான ஆட்சியை பாஜக வழங்குவது கடினம் என காபந்து முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
 பெங்களூரு லக்சந்திராவில் வியாழக்கிழமை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராமலிங்க ரெட்டியைச் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநில அரசியல் குழப்பான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. எனவே, எல்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த ராமலிங்க ரெட்டியை நான் உள்பட காங்கிரஸ் தலைவர்கள், அதனை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினோம். எங்களின் வேண்டுகோளை ஏற்று தனது ராஜிநாமாவை அவர் திரும்பப் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காக அவரை நேரில் சந்தித்தேன்.
 நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தின் போதே அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அது சாத்தியமாகவில்லை. எனவேதான், நேரில் அவரை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டேன். மேலும், மாநிலத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலில், பாஜக நிலையான ஆட்சி வழங்குவது கடினம். மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், முதலில் நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
 கர்நாடகத்தில் இதுபோன்ற ஒரு சவாலான பணி உருவாகியுள்ளது வருத்தத்திற்குரியது. அரசியல் சாசனப்படி, தங்கள் பதவியை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள், சட்டப்பேரவைத் தலைவரின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பு நியாயங்களை விளக்குவது முறையானது. எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கும் உரிமை உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.