மலைச் சரிவு காரணமாக ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான சாலைப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
ராம்பன் மாவட்டத்தில் பந்தியால் மற்றும் மோம் பஸ்ஸி இடங்களில் மலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. கல்லும், மண்ணும் மழைபோலக் கொட்டி வருகிறது.
இதற்கிடையே ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே 147 மைல்கல் அருகே நேற்று நிகழ்ந்த மலைச் சரிவில் ஒருவர் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த 72வது பட்டாலியன் வீரர்கள் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு மலைச் சரிவு ஏற்பட்டபோது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் அதில் சிக்கிக் கொண்டார். இவரை சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த மோப்ப நாய் தான் கண்டுபிடித்து அவரை மீட்க உதவியது.
நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


