அடுத்த காங்கிரஸ் தலைவர்? ராகுலுடன் மூத்த தலைவர்கள் சந்திப்பு
அடுத்த தலைவராக தனது குடும்பத்தைச் சேர்ந்த யார் பெயரையும் பரிசீலிக்க வேண்டாம் என்று ராகுல் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.


மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை.
சோனியா போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. அமேதியில் போட்டியிட்ட ராகுல், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.
எனவே தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் தெரிவித்தார். அவரது முடிவை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்தது.
ஆனால், பதவி விலகும் முடிவில் ராகுல் உறுதியாக உள்ளார். அடுத்த தலைவராக தனது குடும்பத்தைச் சேர்ந்த யார் பெயரையும் பரிசீலிக்க வேண்டாம் என்று ராகுல் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மூத்த தலைவர்களான அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, தருண் கோகோய், உம்மன் சாண்டி, கே.சி. வேணுகோபால் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
இந்நிலையில், பி.சி.சாக்கோ, ஷீலா தீட்சித், கே.சி.வேணுகோபால், அஜன் மாக்கன், ஜெ.பி.அகர்வால், மஹாபல் மிஷ்ரா மற்றும் அர்விந்தர் லவ்லி ஆகியோர் காங்கிரஸ் தலைவர் ராகுல் இல்லத்தில் வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...