நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

தமிழகத்தை அடுத்து அமேதியிலும் உருவான 'கோ பேக் மோடி' குரல் 

சமீப காலங்களில் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்த போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிய 'கோ பேக் மோடி' கோஷம் தற்போது உத்தரப்பிரதேசத்தையும் எட்டியுள்ளது. 

News image
Updated On :3 மார்ச் 2019, 1:39 pm IST

அமேதி: சமீப காலங்களில் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்த போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிய 'கோ பேக் மோடி' கோஷம் தற்போது உத்தரப்பிரதேசத்தையும் எட்டியுள்ளது. 

சமீப காலங்களில் அரசுத் திட்ட துவக்க விழாக்களுக்காக தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்த சமயங்களில் எல்லாம், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் பயனாளர்கள் மத்தியில் 'கோ பேக் மோடி' என்னும் கோஷம் வைரலாகப் பரவியது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான அமேதிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறன்று செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், ரஷ்யாவுடன் சேர்ந்து ரைபிள் துப்பாக்கிகள் தயாரிக்கும் துப்பாக்கித் தயாரிப்பு ஆலை ஒன்றுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

கவுரிகஞ்ச் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் மோடி பங்கேற்க உள்ளார். மேலும், தொகுதி மக்களுக்கு என பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்நிலையில் 'கோ பேக் மோடி' என்னும் கோஷமானது தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியையும் எட்டியுள்ளது.  

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமேதி தொகுதி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள இடங்களில் பாதாகைகள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இவற்றில், ''5 ஆண்டுகள் உங்கள் ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் என்ன? என்றும், கோ பேக் மோடி'' என்றும் இந்தியில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இந்தப் பாதாகைகளையும், சுவரொட்டிகளையும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஜெய்சிங் பிரதாப் யாதவ் என்பவர் ஒட்டியுள்ளார்.

ஆட்சிக்கு வந்த பிறகு, அமேதி மக்களவைத் தொகுதிக்கு பிரதமர் மோடி செல்வது இதுவே முதல் முறையாகும். மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது அமேதிக்கு வந்த மோடி அதன் பின் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.