மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

அதிக வயதில் (118) வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூதாட்டி!

அதிக வயதில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்ற சாதனையை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 118 வயது மூதாட்டி பெற்றார். 

News image
Updated On :7 மார்ச் 2019, 12:09 pm

அதிக வயதில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்ற சாதனையை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 118 வயது மூதாட்டி பெற்றார். 

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கர்தார் கௌர் சங்கா (118) மூதாட்டிக்கு லூதியானாவில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அதிக வயதில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்ற சாதனையை அந்த மூதாட்டி படைத்துள்ளார்.

Story image

இதுகுறித்து மருத்துவர் ரவ்நிந்தர் சிங் கூறுகையில், 

அந்த மூதாட்டியின் சகோதரர் 1903-ஆம் ஆண்டு பிறந்தவர் எனும் சான்று உள்ளது. அதேபோன்று அந்த மூதாட்டியின் மகளுக்கு தற்போது 90 வயதாகிறது. மேலும் 2 முதல் 3 ஆவணங்கள் மூலம் அந்த மூதாட்டிக்கு 118 வயதிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த வயதில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் கடினமானது. அந்த மூதாட்டி தற்போது நலமுடன் உள்ளார். இதுகுறித்து கின்னஸ் மற்றும் லிம்கா சாதனைகளுக்காக பரிந்துரை செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.  

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.