தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆம்ஆத்மி கூட்டணி குறித்து ராகுல் இறுதி முடிவெடுப்பார்: தில்லி காங்கிரஸ்

மக்களவைத் தேர்தலில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைப்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் முடிவெடுப்பார் என தில்லி காங்கிரஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தது. 

News image
Updated On :26 மார்ச் 2019, 8:42 am

DIN

மக்களவைத் தேர்தலில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைப்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் முடிவெடுப்பார் என தில்லி காங்கிரஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தது. ஆம்ஆத்மி உடன் கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் தில்லி காங்கிரஸில் தொடர்ந்து உள்கட்சிப்பூசல் நடந்து வருகிறது. 

இந்நிலையில், ஆம்ஆத்மி உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த சில நாட்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் இந்த முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித், ஆம்ஆத்மி கூட்டணிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராகுல் மற்றும் ஆம்ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனித்தனியாக சந்தித்துள்ளார். 

பாஜக-வை வீழ்த்தும் விதமாக வருகிற மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று அப்போது ஷரத் பவார், ஆம்ஆத்மியிடம் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.