கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.10 கோடி கொடுத்து இழுக்க பாஜக முயற்சி: தில்லி துணை முதல்வர் குற்றச்சாட்டு 

எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.10 கோடி கொடுத்து தங்கள் வசம் இழுக்க பாஜக முயற்சி செய்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :1 மே 2019, 1:51 pm

DIN

புது தில்லி: எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.10 கோடி கொடுத்து தங்கள் வசம் இழுக்க பாஜக முயற்சி செய்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தில்லியில் புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

மத்திய பாஜக அரசுக்கு தங்கள் ஆட்சியில் வளர்ச்சிக்கான விஷயம் என்று கூறுவதற்கு எதுவும் இல்லை. எனவேதான் தற்போது அக்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது எங்களது கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்களை தலா ரூ.10 கோடிக்கு விலைக்கு வாங்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. 

இதற்கு முன்னரும் கூட அக்கட்சி எங்களது எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சித்தது.  ஆனால் அப்போது தேர்தலில் அவர்களுக்கு பொதுமக்கள் சரியான பதிலை வழங்கினர்.  இந்த முறையும் அவர்களது நடவடிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும். 

மேற்கு வங்க தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களைப் பற்றிப் பேசியது சரியல்ல.  இந்தியா ஒரு ஜனநாயக நாடு.  அதனாலேயே தற்போது தான் பதவியில் இருப்பதை பிரதமர் மோடி உணர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

ஆனால் சிசோடியாவின் இந்த குற்றச்சாட்டை பா.ஜ.க. மறுத்துள்ளது. பாஜகவின் தில்லி ஊடக பிரிவு தலைவர் அசோக் கோயல் பேசும்போது, 'தனது கட்சியின் எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்களை தடுத்து நிறுத்த அரவிந்த் கெஜ்ரிவாலால்  முடியவில்லை; எனவேதான் அவர்களது கட்சியின் உள்விவகாரங்களில் பாஜக.வின் பெயரை தேவையின்றி இழுக்கின்றார்கள்' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.