'ராகுலைக் காணோம்': அமேதியில் இரவோடு இரவாக முளைத்த விவகார போஸ்டர்கள்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைக் காணவில்லை என்று அவரது அமேதி தொகுதியில் இரவோடு இரவாக முளைத்த போஸ்டர்களால் பரபப்பு ஏற்பட்டுள்ளது.


லக்னௌ: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைக் காணவில்லை என்று அவரது அமேதி தொகுதியில் இரவோடு இரவாக முளைத்த போஸ்டர்களால் பரபப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் மூன்றாவது முறையாக மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ராகுல் காந்தியைக் காணவில்லை என்று அவரது அமேதி தொகுதியில் இரவோடு இரவாக முளைத்த போஸ்டர்களால் பரபப்பு ஏற்பட்டுள்ளது.
அமேதி தொகுதியில் இரவில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் பொதுமக்கள் நிற்பது போன்ற படங்களுக்கு மத்தியில், "15 வருடங்கள் X 365 நாட்கள் = 5475 நாட்கள். எங்கே அமேதி தொகுதி எம்.பி?" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்கள் எங்கே அச்சடிக்கப்பட்டது? யாரால் ஒட்டப்பட்டது என்பது போன்ற விபரங்கள் தெரியவில்லை.
இரவோடு இரவாக முளைத்த இந்த போஸ்டர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் செய்த புகாரின் காரணமாக, உடனடியாக நீக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...