பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டுமா?: மோடி ஆவேசம்
பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டுமா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.


குஷி நகர்: பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டுமா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் சோபியான் நகரில் ஹிந்த் சீதாபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் ஞாயிறன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்கள் மீது பதுங்கியிருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். உடனடியாக பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கி சுடு நடத்தினர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்
இந்நிலையில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டுமா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்துக்கான ஆறாவது கட்டத் தேர்தல், 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஞாயிறன்று நடக்கிறது.
அதேசமயம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் பகுதியில் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி ஞாயிறன்று பேசினார். தனது பேச்சில் அகிலேஷ் மற்றும் மாயாவதி ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் பேசும்போது கூறியதாவது:
இன்று காஷ்மீரில் பயங்கரவாதிகள் நமது ராணுவ வீரர்களால் கொல்லப்பட்டு உள்ளனர். இருந்தபோதும் தேர்தல் நடக்கும்பொழுது மோடி ஏன் பயங்கரவாதிகளை கொன்றார் என ஒரு சிலர் வருத்தமடைவர்.கேள்வி எழுப்புவர்.
நமது வீரரகளைக் கொள்ள ஆயுதமேந்திய ஒரு பயங்கரவாதி தாக்குதல் நடத்த வருகிறான். அப்போது நமது வீரர்கள் தேர்தல் ஆணையத்திடம் சென்று அவனை கொல்வதற்கு அனுமதி கேட்டு விட்டுதான் செல்ல வேண்டுமா?
இவ்வாறு மோடி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...