ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சந்திரபாபு நாயுடுவின் உற்சாகம் மே 23-ஆம் தேதி வரை தான்: சிவ சேனை

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் மே 23-ஆம் தேதி வரை தான் என்று சிவ சேனை விமர்சித்துள்ளது. 

News image
Updated On :20 மே 2019, 5:37 am

DIN

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் மே 23-ஆம் தேதி வரை தான் என்று சிவ சேனை விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் பதிவிட்டுள்ளதாவது:

எதிர்கட்சிகளின் தரப்பில் இருந்து குறைந்தபட்சம் 5 பிரதமர் வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். எனவே அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்று அவர்களுக்குள்ளாகவே குழப்பம் உள்ளது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஏற்கனவே குறிப்பிட்டது போன்று 300 இடங்களுக்கும் மேல் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்.

எந்த காரணமும் இன்றி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேவையில்லாமல் அலைகிறார். அவருடைய இந்த உற்சாகமும், எதிர்பார்ப்புகளும் மே 23-ஆம் தேதியுடன் முடிந்துவிடும். அதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறோம் என்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.