இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கருத்துக் கணிப்பு முடிவுகள் எதிரொலி: 1422 புள்ளிகள் உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை 

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையானது, திங்களன்று 1422 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளது.

News image
Updated On :20 மே 2019, 1:21 pm

DIN

மும்பை: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையானது, திங்களன்று 1422 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளது.

நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து வந்த மக்களவைத் தேர்தலானது ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.

இதில் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்றதைப் போலவே பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று நிறைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன. இதன் முடிவுகள் தேசிய பங்குச்சந்தையிலும்  எதிரொலித்தது.

வார வர்த்தகத்தின் முதல் நாளான திங்களன்று இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. காலை சென்செக்ஸ் 950 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 962.12 புள்ளிகள் அதிகரித்து, 38,892.89 புள்ளிகளிலும், நிஃப்டி 286.95 புள்ளிகள் உயர்ந்து, 11,694.10 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.

வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,421.90 புள்ளிகள் உயர்ந்து 39 ஆயிரத்து 352 புள்ளிகளாக நிறைவடைந்தது.

இது கடந்த பத்தாண்டுகளில் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.