புது தில்லி: மோடி சர்க்காரை உருவாக்கிய மக்களுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 306 இடங்களுக்கு மேலாக முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி மீண்டும் இந்திய பிரதமராக வருவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் மோடி சர்க்காரை உருவாக்கிய மக்களுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாவது:
இந்திய மக்கள்பெரும்பான்மை தீர்ப்புக்கு அடிபணிந்து 'மோடி சர்க்காரை' உருவாக்கியுள்ளனர். இந்த அரசானது மக்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கைக்கும், வரலாறு காணாத வளர்ச்சிக்கு அடையாளமாகும்.
சக குடிமக்களுக்கு வாழ்த்துக்கள்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.