கட்சியின் கொள்கைகளுக்காகவே பணியாற்ற விரும்புகிறேன், பதவிக்காக அல்ல என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் மூத்த தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து ராகுல் விமர்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாதி, மதங்களைக் கடந்து மக்களுக்காவும், கொள்கைகளுக்காவும் மகாத்மா காந்தி போராடினார். இருப்பினும் கடைசிவரை எந்தப் பதவியையும் ஏற்கவில்லை.
சில தலைவர்கள் தங்களின் வாரிசுகளுக்கு பதவியும், வாய்ப்பும் வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். ரஃபேல் குற்றச்சாட்டு தொடர்பாக பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மூத்த தலைவர்கள் மெத்தனமாக செயல்பட்டனர் என்று குற்றம்சாட்டியதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுபோன்று, பாஜக தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும், பாஜக-வுக்கு எதிராக செயல்பட்டதிலும் தனது சகோதரர் ராகுல், மூத்த தலைவர்களால் தனித்துவிடப்பட்டதாகவும் அவரது சகோதரி பிரியங்கா வதேராவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மான் வேட்டை கதை! காலா ஹிரன் படத்தை எதிர்த்து சல்மான் கான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
நியூசி. நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

புகழ்பெற்ற துப்பாக்கி சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா காலமானார்!

அடுத்த 2 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics



