ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு சபாநாயகர் பதவி?

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரஸுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2019, 1:33 pm

DIN


மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரஸுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவுள்ளன. இந்தக் கூட்டணியின் தலைவராகவும், மகாராஷ்டிர முதல்வராகவும் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான இந்த அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கலாம் என பேசப்பட்டு வந்தது. அதேபோல் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி மற்றும் 13 அமைச்சர்கள் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனைக்கு முதல்வர் பதவி தவிர 15 அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்படவுள்ளது. இதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும் 13 அமைச்சர்கள் பதவியும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, உத்தவ் தாக்கரே நாளை முதல்வராகப் பதவியேற்கும்போது அவருடன் இணைந்து 40 அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.