25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

Published On :31 ஜனவரி 2024, 6:48 pm IST

இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.   

சிகரெட், பீடி போன்றவற்றுக்கு மாற்றாக உலக அளவில் இ-சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடக்கத்தில் அதிக ஆபத்தில்லாதவை எனக் கூறப்பட்டாலும், பல்வேறு ஆய்வுகளின் முடிவில், புகையிலை சிகரெட்டுக்கு நிகரான தீங்குகள் இந்த இ-சிகரெட்டாலும் ஏற்படும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இ-சிகரெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் நாடு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

எலக்ட்ரானிக் முறையில் நிகோடினை வெளியிடும் கருவிகள், இ-ஹுக்கா உள்ளிட்ட அனைத்து வகையான எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் ஏற்றுமதிக்கும் தடைவிதிக்கப்பட்டது. இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி மத்திய அரசின் அவசரச் சட்டமும் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

Story image

இந்த மசோதாவின் படி, விதிமுறைகளை மீறும் எந்தவொரு நபருக்கும் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, அல்லது 1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மின் சிகரெட்டுகளை சேமித்து வைத்திருக்கும் ஒருவருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 50,000 டாலர் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த மசோதா தொடர்பான மக்களவை விவாதத்தின்போது பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், 'மின்-சிகரெட்டுகளை பயன்படுத்துபவர்களை நிறுத்துவது கடினம். எனவே, இ- சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கிறோம். சந்தைகளில் கிடைக்காத சூழ்நிலையில் மக்களால் எப்படி பயன்படுத்த முடியும்? சட்டத்தின் மூலம் முழுவதுமாக இ-சிகரெட்டுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.