டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள்!

மாநிலத்தில் வெங்காய தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.120-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:20 pm

DIN

தமிழகம், தில்லி, மும்பை உட்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை கிலோ ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயா்வு காரணமாக வெங்காயம் பதுக்கலுக்கு வித்திட்டுள்ளதாக வா்த்தக பகுப்பாய்வாளா்கள் கூறுகின்றனா். 

மேலும், அதிக மழை, பாரம்பரிய முறை காரணமாக சேமிப்பில் வைக்கப்பட்டுள்ள வெங்காயம் அழிந்துவிட்டது. ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், விலை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், கூட்டுறவு அங்காடி ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் சூழல் பிகாரில் ஏற்பட்டுள்ளது. விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் பிகார் அரசு, கூட்டுறவு அங்காடிகள் மூலம் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

Story image

இதுகுறித்து ரோஹித் குமார் எனும் கூட்டுறவு அங்காடி ஊழியர் கூறுகையில்,

மாநிலத்தில் வெங்காய தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.120-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. எனவே பிகார் அரசு கூட்டுறவு அங்காடி மூலம் குறைந்த விலையில் (ஒரு கிலோ ரூ.35) விற்பனை செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வருவதால் கல்வீச்சு சம்பவங்களும், கலவரங்களும் ஏற்படுகிறது. 

இதில் எங்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாகிறது. போதிய பாதுகாப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே வேறு வழியின்றி எங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விநியோகிக்கிறோம் என்று தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.