அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மாட்டிறைச்சி விவகாரத்தில் 'ஒரே நாடு; ஒரே கொள்கை' முறையை பின்பற்றாதது ஏன்? - பாஜக அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

பசுவதை விவகாரத்திலும் 'ஒரே நாடு; ஒரே கொள்கை' என்ற முறையை பாஜக அரசு பின்பற்றாதது ஏன்? கோவா மாநில காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

News image
Updated On :10 செப்டம்பர் 2019, 6:00 pm IST

மாட்டிறைச்சி விவகாரத்தில் 'ஒரே நாடு; ஒரே கொள்கை' என்ற முறையை பாஜக அரசு பின்பற்றாதது ஏன்? கோவா மாநில காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பசுவதை, பசு கடத்துதல், மாட்டிறைச்சி உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், அதே நேரத்தில் கேரளா, வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் மாட்டுக்கறி உண்கின்றனர். கேரளாவில் மாட்டுக்கறி விழா என்ற ஒரு திருவிழாவே நடத்தப்படுகிறது. ஏன், பாஜக கூட தேர்தல் வாக்குறுதியில், கேரள மக்களுக்கு மாட்டிறைச்சி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறியது நினைவிருக்கலாம். 

ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளன. இந்நிலையில், கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர், மாட்டிறைச்சி விவகாரத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேலும் அவர் பேசும்போது, 'கேரளா, கோவா மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடையில்லை என்றும் வடமாநிலங்களில் மாட்டிறைச்சி உண்பது தண்டனைக்குரியது என்றும் இடத்திற்கேற்ப கொள்கைகளை மாற்றுகிறது.

அப்படியென்றால் மாட்டிறைச்சி விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் பாதிக்கப்படுகிறார்களா? நாட்டில் அனைத்து மக்களையும் ஒரே கண்ணோட்டத்தோடு தானே பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தை வைத்து பாஜகவினர் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். 

மற்ற விஷயங்களில் எல்லாம் 'ஒரே நாடு; ஒரே கொள்கை' என்பதை பின்பற்றும் பாஜக அரசு மாட்டிறைச்சி விவகாரத்திலும் அதனைப் பின்பற்ற வேண்டும்' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.