கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை தனக்கு உதவியாக நியமித்தார்.
அதில், பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாக நிருபேந்திர மிஸ்ரா (74) நியமிக்கப்பட்டார். இதையடுத்து தனது பதவியில் இருந்து விலகுவதாக ஆகஸ்ட் 30-ஆம் தேதி ராஜிநாமா கடிதம் அளித்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் புதிய முதன்மைச் செயலராக பி.கே.மிஸ்ரா புதன்கிழமை பதவியேற்றார்.
அதுமட்டுமல்லாமல் பிரமதர் நரேந்திர மோடியின் தலைமை ஆலோசகராக பி.கே.சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.