நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன், தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா சந்திப்பு

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2019, 8:03 am

DIN

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் நாட்டில் உள்ள ஆளுநர்களில் இளவயது ஆளுநர் என்ற பெருமையை தெலங்கானா ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான தமிழிசை செளந்தரராஜன் (58) பெற்றுள்ளார். 

வயதில் மூத்த ஆளுநர் என்ற பெருமையை ஆந்திர ஆளுநர் விஷ்வ பூஷண் ஹரிசந்தன் (85) பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த மூத்த ஆளுநராக மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் (84) உள்ளார். இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.