லக்னௌ: உன்னாவ் பாலியல் வழக்கு தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
உ.பி மாநிலத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய உன்னாவ் பாலியல் சம்பவம் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது வழக்கறிஞருக்கு சமீபத்தில் நிகழ்ந்த வாகன விபத்து தொடர்பாகவும் சிபிஐ விசாரணைநடத்திவருகிறது.
இந்நிலையில் உன்னாவ் பாலியல் வழக்கு தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரின் வீடு, அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடக்கிறது.
லக்னௌ, உன்னாவ், பாண்டா, பதேபூர் உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.