மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் நிதி

பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் நிதி அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜூலை 2019, 8:26 pm

DIN



பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் நிதி அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கூறுகையில், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.1 லட்சம் கோடியாக குறைந்துவிட்டது. திவால் சட்டத்தை அமல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கடந்த 4 ஆண்டுகளில் வங்கிகள் ரூ.4 லட்சம் கோடி வாராக் கடனை மீட்டுள்ளன. இதையடுத்து, பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.70,000 கோடி நிதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கவும், தொழில்களை விரிவுபடுத்தவும் எளிதில் கடன் கிடைப்பதால் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைக்கவும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். மொத்தம் 8 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும் அளவுக்கு வங்கிகள் ஒன்றுடன் மற்றொன்று இணைக்கப்படும். இந்த நடவடிக்கைகள் எவ்வித பிரச்னையும் இன்றி மேற்கொள்ளப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.