கரோனா: இந்தியாவில் பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு
இந்தியாவில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது.


இந்தியாவில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய வைரஸ் இன்று உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உலக மக்கள்தொகையில் சுமாா் மூன்றில் ஒரு பங்கினா் தங்கள் வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50லிருந்து 53ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவால் 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2069 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா பாதிப்பிலிருந்து 155 பேர் குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...