கேரளத்தில் குளத்தில் விழுந்த இரண்டு காட்டு யானைகள் மீட்பு
கேரளத்தில் சேறு நிறைந்த குளத்தில் சிக்கிக்கொண்ட 2 காட்டு யானைகள் மீட்கப்பட்டன.


கேரளத்தில் சேறு நிறைந்த குளத்தில் சிக்கிக்கொண்ட 2 காட்டு யானைகள் மீட்கப்பட்டன.
கேரள மாநிலம், வயநாட்டின் மெப்பாடியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்திலுள்ள குளத்தில் இன்று அதிகாலை 2 யானைகள் விழுந்தன. சேறு நிறைந்து காணப்பட்டதால் யானைகளால் குளத்திலிருந்து வெளியேற முடியவில்லை.
இதனைக் கண்ட அப்பகுதியினர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அங்க விரைந்த அதிகாரிகள் ஜே.சி.பி உதவியுடன் யானைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் குளத்திலிருந்து மீட்கப்பட்டன.
இதையடுத்து அந்த யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...