புபனேஸ்வர்: ஒடிசாவில் வியாழக்கிழமையான இன்று புதிதாக 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் என்ற கொடிய நோய்த் தொற்றுக்கு நாளுக்கு நாள் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. உலகளவில் இதுவரை 89 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஒடிசாவில் தெங்கானால் நகரத்தைச் சேர்ந்த 51 வயது பெண் மற்றும் மேற்குவங்கத்தில் மெதினிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முதியவரும் கரோனாவுக்கு புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, குர்தாவிலிருந்து 34, பத்ராக்கிலிருந்து மூன்று மற்றும் கட்டாக், கேந்திரபாரா, கலஹந்தி, பூரி மற்றும் ஜாஜ்பூரில் இருந்து தலா ஒரு வழக்குகள் பதிவாகியுள்ளன. கரோனா கண்டறியப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் தற்போது தெங்கானால் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவதால் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அம்மாநில அரசு உடுத்தவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


