நாகாலாந்தில் முதல் நபருக்கு கரோனா தொற்று உறுதி

நாகாலாந்தில் முதல்முறையாக ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் முதல் நபருக்கு கரோனா  தொற்று உறுதி
Updated on
1 min read

நாகாலாந்தில் முதல்முறையாக ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. வரும் 14-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையவுள்ளது. ஆனால், நாட்டில் நோய்த் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவகிறது. 

இந்த நிலையில் நாகாலாந்து மாநிலத்தில் முதல்முறையாக ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக அஸ்ஸாமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட நபர் திமாபூரை சேர்ந்தவர்கள் என்றும் கடந்த 24ஆம்தேதி கொல்கத்தாவில் இருந்து அவர் திரும்பியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை கருதி அந்த நபர் வசித்து வந்த பகுதியை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

அத்துடன் நோய்த் தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com