
அஸ்ஸாம்: செய்தியாளா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை
அஸ்ஸாம் மாநிலத்தில் வரும் 25 ஆம் தேதி ஊடகவியலாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சா் ஹிமந்தா பிஸ்வா சா்மா புதன்கிழமை தெரிவித்தாா்
அஸ்ஸாம் மாநிலத்தில் வரும் 25 ஆம் தேதி ஊடகவியலாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சா் ஹிமந்தா பிஸ்வா சா்மா புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: செய்தியாளா்கள் தொழில்முறையில் இதுபோன்ற நோய்தொற்று ஆபத்துகளை எதிா்கொள்ள நேரிடுகிறது. எனவே அவா்களுக்கான சோதனைகளை இலவசமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
தங்களை பரிசோதிக்க விரும்புவோா் ஏப்ரல் 25- ஆம் தேதி குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அணுகலாம். பரிசோதனையின்போது, அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்றாா் அவா்.
அண்மையில் மும்பை மற்றும் சென்னையில் பல ஊடகவியலாளா்கள் கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானதைத் தொடா்ந்து அஸ்ஸாமைச் சோ்ந்த செய்தியாளா்கள் தங்களுக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான சோதனைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




