பெங்களூரு: கா்நாடக முதல்வா் பி.எஸ் எடியூரப்பாவின் மகளுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, முதல்வர் எடியூரப்பாவுக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாத நிலையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார்.
இந்நிலையில், தற்போது அவரது மகளுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்றிரவு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மாநில பாஜக துணைத் தலைவரும் முதல்வரின் மகனுமான பி.டி விஜயேந்திரா மருத்துமனைக்குச் சென்று அவரது தந்தையின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
தனது தந்தை நன்றாக இருக்கிறார். மக்கள் பீதியடைய தேவையில்லை என்று அவர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, முதல்வரின் இரண்டு ஊழியர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், முதல்வர் எடியூரப்பா தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதம்: மக்கள் போராட்டம்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


