விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கேரளத்தில் கனமழை நிலச்சரிவு: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு

கேரளத்தில் பெய்துவரும் கனமழையால் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.

News image
கேரளத்தில் கனமழை நிலச்சரிவு: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு
Updated On :7 ஆகஸ்ட் 2020, 10:03 am

DIN

இடுக்கி: கேரளத்தில் பெய்துவரும் கனமழையால் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரளத்தில் பெருது வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் தரைப்பாலங்கள் மூழ்கிய நிலையில், ஓரு சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலங்கள் இடிந்து சேதம் அடைந்தன.

இதனிடையே இடுக்கி மாவட்டம் ராஜமாலா குடியிருப்பு பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கேரள அமைச்சர் எம்.எம். மணி பேசியதாவது, நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையுடன் காவல்துறை, தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.

இரவு நேரங்களிலும் மீட்பு பணிகளை தொடரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையிடம் இருந்து மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர்கள் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

மேலும் இது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் கூறியதாவது, ராஜமாலா குடியிருப்பு பகுதியில் எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதிகளில் நான்கு தொழிலாளர் மையங்களில் சுமார் 82 பேர் தங்கியிருந்தனர். ஆனால் நிலச்சரிவின்போது எத்தனை பேர் அப்பகுதிகளில் இருந்தனர் என்பது தெரியவில்லை. தொடர் மழையின் காரணமாக வான்வழி மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.