நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தக்கூடாது என நிபந்தனையுடன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

கடைக்காரரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு சமூகவலைத்தளத்தை 2 மாதங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என நிபந்தனை விதித்து நீதிமன்றம் ஜாமின் வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஆகஸ்ட் 2020, 6:32 am

DIN

கடைக்காரரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு சமூகவலைத்தளத்தை 2 மாதங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என நிபந்தனை விதித்து நீதிமன்றம் ஜாமின் வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வர் கிராமத்தில் வசிக்கும் ஹரேந்திர தியாகி (18). இவர் உள்ளூர் கடைக்காரரைத் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூன் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

சமீபத்தில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் தனது வழக்குரைஞர் மூலம் ஜாமின் கோரி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குற்றம்சாட்டப்பட்டவரின் எதிர்கால நலனைக்கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என அவரது வழக்குரைஞர் மனுவில் குறிப்பிட்டுருந்தார். இதனைப் பரிசீலித்த நீதிமன்றம் மனுதாரர் 2 மாதங்களுக்கு வாட்சப்,முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், தனது சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்கியது.

ஜாமின் மனுவிற்கு நீதிமன்றம் விதித்த வித்தியாசமான நிபந்தனைகள்  பலரையும் கவர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.