கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இடுக்கி மாவட்டம் மூணாறு அருகேவுள்ள ராஜமாலா பகுதியில் தொடர் கனமழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. அந்தப் பகுதியிலிருந்த தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த 82-க்கும் அதிகமாக தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர். இதைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆக இருந்த நிலையில், தற்போது மேலும் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 5. லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.