மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நேபாளம் நாட்டிற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை வழங்கிய இந்தியா

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் விதமாக ரூ.2.8 கோடி மதிப்பிலான 10 வென்டிலேட்டர் கருவிகளை நேபாளம் நாட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இந்தியா வழங்கியது.

News image

நேபாளம் நாட்டிற்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள்

Updated On :9 ஆகஸ்ட் 2020, 11:15 am

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் விதமாக ரூ.2.8 கோடி மதிப்பிலான 10 வென்டிலேட்டர் கருவிகளை நேபாளம் நாட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இந்தியா வழங்கியது.

நேபாளத் தலைநகர் காத்மண்டில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேபாளத்திற்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ரா வென்டிலேட்டர்களை ராணுவத் தலைமை அதிகாரி பூர்ண சந்திர தபாவிடம் வழங்கினார்.

நேபாளத்தில் ஏற்படும் பேரிடர்களில் மீட்பு பணிகளில் இந்திய ராணுவம் உதவி வந்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.